முதல் நிலை

அறிமுக நாட்களிலும், அடுத்த
சில நாட்களிலும் - நீ வீசிச்சென்ற
புன்னகைதான்,
என் சித்தம் கலைத்தது,
மனதிலோர் யுத்தம் முளைத்தது.
அகத்தில் ரசித்தாலும் - அதை
புறத்தில் முறைத்தேன் நான்..

இரண்டாம் நிலை

மீண்டும் தொடர்ந்த சில நாட்களில்- என் மனம்
என்னைக் கேட்காமல் - தினம்
உன்னை எதிர்ப்பார்க்கும்
நீ வந்தால் சிறகடிக்கும்
இல்லையேல் நகம் கடிக்கும்

உன் வருகைக்கு கோஷமிடும்
வந்ததும் பார்க்காததாய் வேஷமிடும்

மூன்றாம் நிலை

நீ நட்புடன் பழக வந்தாய் - ஆனால்
நான் வெறுப்பதாய் விலகிச்சென்றேன்,
என் கற்புடன் விளையாட வந்த
கள்வனோ என பயந்தேன்
பின் நாளில், கற்பிற்கு மட்டுமல்ல
காலத்திற்கும் உடனிருக்கும் கணவன் - நீ
என அறிந்தேன்.

அன்று முதல்..

கற்பிற்குள் ஒளித்து வைத்து
உனக்கான காதலையும் நான் சுமந்தேன்..

நான்காம் நிலை

இரவில், போர்வைக்குள் விழித்திருந்தேன்
சிலகாலம்..
காதலின் கனவுகள் போர்த்தி தூங்கினேன்
சிலகாலம்..
வெளியில் மௌனம் சாதித்தேன்,
உள்ளத்தில் வார்த்தைகள் சேமித்தேன்,
காதல் சொல்ல ஒரு தருணமும் யூகித்தேன்.
ஆனால்,
உன் பார்வை சந்தித்த போது
சிதறிப்போயின சேமித்த வார்த்தைகள்.
எனினும்,
கஜினியாய் படையெடுத்தேன் - உன்னிடம்
காதலைச் சொல்ல,
ஆனால் இன்றுவரை இயலவில்லை - என்பதை
வேறு எப்படிச் சொல்ல?

ஐந்தாம் நிலை

காதல் தெரிவிப்பதென்பது
ஆண்களின் வேலை,
ஏற்பதும், தவிர்ப்பதும்
பெண்களின் லீலை.
எனவே காதலா, எப்போது சொல்வாய்?
என்னுடைய காதலை
உன்னுடைய வார்த்தைகளாய்.
அப்போது தருவேன் நான்
முத்தமாய் அன்பையும்
மொத்தமாய் என்னையும்.


எழுதியவர் : சக்தி குமார்-கோவை
கவிதைகள்


 சின்னஞ்சிறுசுங்க மனசுக்குள்ள 
சிலுசிலுன்னு தென்றல் வீசிய 
அந்த சில நாட்களை
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

புதுசு புதுசாக நெனப்புகள் 
பூத்து குலுங்கிய அந்த 
பொன்னான நாட்களை 
வாழ்நாளில் 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சின்னாவால வீடு கட்டி நானும் நீயும் 
குடித்தனமும் நடத்திபாதோம்....
அந்த மலையடிவாரத்தில் 
வாழுரப்போ
மீன்கொழம்பு வச்சு, ஊட்டிவிட்டதை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

வாழ்க்கை பயணத்தில் இந்த பயணம் 
தந்த இன்பம் துன்பம் 
எதிர்பார்ப்பு ஏமாற்றம் 
சிரிப்பு கும்மாளம் 
பப்லூ , இன்னோவா...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

காட்டுப்பகுதி கோயிலுக்குள்ள 
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 
துண்ணூறு குங்குமம் வச்சது 
பாதி கல்யாணம் ஆனமாதிரி இருந்தது...
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது,

சில்லென்ற குளிர் காற்றுடன் 
காதலின் சந்கீதங்களுடன் 
வாழ்ந்து பார்த்த 
அந்த சிலநாட்களை 
நினைக்க மறந்தாலும் மறக்க முடியாது.,...

----------------------ரசிகன்பாலு. சிங்கபூர் 
rasiganbalu@gmail.com