ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும், நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும், ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோ, காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல.
நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும், அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி.
சரி காதலன் செய்ய வேண்டியது...
உங்களுக்கு முதல் முன்னுரிமை அளித்திருப்பது.
உங்களை அவரது குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைத்திருப்பது.
எதிர்காலத் திட்டங்களை வகுத்து வைத்திருப்பது.
எந்த ஒரு காரியத்தையும் உங்களை வைத்துக் கொண்டு செய்வது.
அவரது ரகசியங்களையும், எதிர்கால கனவுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது.
உங்களது தோழிகளை கவருவதில் ஆர்வம் காட்டுதல்.
உங்களை பணி அல்லது மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்பது
எதிர்பாராத விதமாக பரிசுகளை அனுப்புதல், உங்களது ஒவ்வொரு செயலுக்கும் பாராட்டு மழை பொழிவதும்.
காதலி செய்ய வேண்டியது
தான் செலவிட்ட மறக்கமுடியாத நாட்களையும், நிகழ்ச்சிகளையும் உங்களிடம் பரிமாறிக் கொள்வது.
ஒரு நாள் முழுவதும் நடந்த சிறு சிறு விஷயங்களை ஒன்று விடாமல் உங்களிடம் ஒப்பிப்பது.
உங்களுடனான வாழ்க்கை, குழந்தை, திருமணம், முதுமை, பயணம் போன்றவற்றைப் பற்றி அடிக்கடி பேசுதல்.
உங்களை அடிக்கடி கோபப்படுத்துதல்
உங்கள் அம்மாவிடம் தொலைபேசியில் அதிக நேரம் பேசுதல்.
உங்களது செயல்களைப் பற்றிய கடுமையான விமர்சனம் தெரிவிப்பது.
உங்களுடன் வெளியே செல்ல ஏதாவது ஒரு காரணம் தேடுவது.
உங்களது கடந்தகால, நிகழ்கால, எதிர்காலங்களைப் பற்றியை கேள்விகளை அடுக்கிக் கொண்டே போவது
உங்களை அடிக்கடி அதிர்ச்சிக்குள்ளாக்குதல் போன்றவை.
இதெல்லாம் ஒரு வரைமுறைதான். இதையெல்லாம் தாண்டியும் பல காதல்கள் வாழ்ந்து சரித்திரம் படைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அதில் ஒன்றாகவும் உங்கள் காதல் இருக்கலாம்.
காதலிக்கும் முன் பல முறை யோசியுங்கள். ஆனால் காதலித்த பின்பு வேறு எதையும் யோசிக்காதீர்கள் நேசிப்பதைத் தவிர.
காதலர்கள் சிற்சில தவறுகளை செய்துவிட்டு பெரிதாக சண்டை போட்டுக் கொள்வார்கள். அதனைத் தவிர்க்க உங்களுக்கு சில யோசனைகளைத் தருகிறோம்.
காதல் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காதலிப்பவருக்கு தெரியாமல் இருக்கக் கூடாது. காதலை மறைப்பதில் எந்த பயனும் இல்லை. தைரியமாக வெளிப்படுத்தினால் மட்டும் நீங்கள் காதலராக முடியும்.
உங்கள் நண்பர்களிடம் எல்லாம் மாய்ந்து மாய்ந்து நீங்கள் காதலிப்பதை தெரிவிப்பதை விட ஒரு நிமிடம் தைரியமாகச் சென்று நீங்கள் காதலிப்பவரிடம் சொல்லி விடுங்கள் உங்கள் காதலை.
காதலிப்பவரின் பிறந்த நாளை மட்டும் வாழ்க்கையில் மறந்து விடாதீர்கள். அன்றைய நாளை முன்னரே நினைவு கூர்ந்து அவருடன் சிறப்பாக கழிக்க திட்டமிடுங்கள்.
ஒன்று... உனக்கு வரும் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம் என்று அவருடன் கலந்து பேசி திட்டமிட்டு அதனை செயல்படுத்தலாம்.
காதலிப்பவரிடம் அடிக்கடி உங்களது காதலை தெரிவியுங்கள். அது வார்த்தையாகவும் இருக்கலாம். வாழ்த்து அட்டையாகவும் இருக்கலாம். பூக்களும் உங்கள் காதலைச் சொல்லும்.
காதலிப்பவரின் குணாதிசயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். மிகவும் தவறான செயலாக இருந்தால் மட்டும் அதனை எடுத்துக் கூறி அவருக்கு உணர்த்துங்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் காதலரின் குறைகளைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்க வேண்டும்.
NET ல் சுட்டது
காதல் எப்டி வரும், காதல் எப்ப வரும், காதல் எங்க இருந்து வரும் என்று யாருக்கும் தெரியாது....
வரும்போது வரும், ஆனால் எல்லோருக்கும் வரும். பூமியில் பிறந்த ஒவ்வொரு ஜீவ ராசிகளும் காதல் வயப்பட்டே ஆக வேண்டும் என்பது நியதி....
சரி நான் சொல்ல வந்தத சொல்றேன், எல்லோரும் காதல் திரைப்படம் பார்த்திருபீங்க அந்த கதை கொஞ்சம் மனச உருக்கி இருக்கும் என நம்புகிறேன்,
அந்த படத்தின் கிளைமாக்ஸ் பாக்கலாமா
கீழ ஒரு லிங்க் இருக்குல அது மேல கிளிக் பெண்ணுங்க பாருங்க பீல் பெண்ணுங்க .....
http://www.youtube.com/watch?v=kKETbKQWAqg
பாதுடிங்களா சரிங்க இத விடுங்க ....
இன்னொரு சின்ன காதல் ஜோடிகள் காதல் வயப்பட்டு ப்ருஅகு என்ன நடந்தது என்று பார்க்க
இங்க கிளிக் பெண்ணுங்க
http://www.youtube.com/watch?v=mS7krPKkrYE
இந்த நிலைமை ஏன் இவர்களுக்கு வந்தது
ஏன் இந்த காதலர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் , எல்லாம் விதி என்று விட்டு விடலாமா , இது போன்ற தற்கொலைகளை தடுப்பது எப்படி...........
இப்படி எல்லாம் யோசிச்சு யோசிச்சு டயர்ட் ஆனது தான் மிச்சம்.
இவுங்க ரெண்டு பெரும் தன்னையே மாய்துகொண்டதால் இயற்கைக்கே பொறுக்கவில்லை பாருங்களேன் அதனால் தான் மழை வந்தது.
எனக்கு மழை ரெம்ப பிடிக்கும் நான் அந்த மழை ய தாங்க காதலிக்கிறேன் ....
இப்படிக்கு காதல் வானிலே ஓர் இயற்க்கை காதலன் ..... ரசிகன்பாலு ....
நீங்களும் யோசிக்க முயற்சிக்காதிங்க போயி வேலைய பாருங்க........
எல்லாம் விதிப்படிதான் ..
மீண்டும் அடுத்த பதிவில சந்திப்போமா ....
நன்றி !!!!!!
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே
தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!
உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!
இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென
அடம்பிடிக்கிறது,
நிலா!
உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
உன்னை நினைத்தே என் வாழ்க்கை பயணம்
கவிதை , காதல் , காதல் ரசிகன் , ரசிகன்பாலு
காதல் வெளிப்பாடு -கவிதையே
மழை நின்ற பின்னும் வரும் தூறல் போல
மழை நின்ற பின் வரும் மண் வாசனை போல
பிரிந்த பின்னும் நினைவுகள் இன்னும் என் நெஞ்சில் .
சில்லென்று ஒரு காதல்......
நீ கடந்த பாதையெங்கும்
சிரித்துக்கொண்டிருக்கும் பூக்களெல்லாம்
உன் கூந்தல் உதிர்த்தவையா?
உன் பாதம்பட்ட பூரிப்பில் நிலம் பூத்தவையா?
பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
NET ல் சுட்டது ...